அவளிடம்
இன்னும் சொல்லவில்லை . . .
யாருமற்ற
நடை வெளியில்,
நிழல்
துணை மட்டும் கொண்ட,
தூக்கமிலா
தூணுக்கு உந்து கொடுத்து
கயவரைப்
போல் இரா முழித்து,
வெளிச்சமில்லா
வெளியை வெறித்துக் கொண்டு
காது
மடல் வலிப்பது தெரியாமல்
“ம்,
ம், ...., ம்: அப்புறம்” சொல்லி
அவ்வப்போழ்து
வெட்கப் புன்னகை உதிர்த்து
விடிவது
தெரியாமல் வறுக்க,

“இன்று
அவளுடன் ஏன் சிரித்தாய் ?”
“அவள்
ஏன் உன்னையேஏஏஏஏஏஏஏ பார்க்கிறாள் ?”
“இனி
‘கா’ உன் பேச்சு”
என்
சொல்லி எனை ‘திக்’கிட ,
‘நான்
சொல்றத கேக்க போறியா இல்லையா ?’
என்றெல்லாம்
உரிமையாய் அதட்டிட ,
ஊடல்களால்
குளிர் காய்ந்து
உவமை
ஓவியமாய் வாழ்ந்திட ;

புருவத்தின்
வளைவை யொட்டி
முன்
தொங்கிய முடியை
என்
கைச்சிறகால் கோதி
காதிற்கு
பின்னே கடத்தி
முகத்தை
முன் இழுத்து
மூச்சுக்
காற்றால் முகம் நுகர்ந்து
நெற்றிக்கு
நடுவே ஒத்தடமாய் முத்தமிட ,
வெட்கம்
மூடிய உன் விழிகளை
திட
நீர் ததும்பி எழுப்ப
உள்
மணி உற்சாக ஓசை அடித்து
கலர்
கனவுகள் கண் முன்னே விரிய ,

காதல்
என்னும் காவியத்தை
அவளிடம்
மட்டும் சொல்லாமல்
கற்பனைகளில்
மட்டும் வரைந்து கொண்டிருக்கிறேனே !
ஏன்
?
ஏன்
?
ஏன்
?
எனக்கென்ற “அவள்” இன்னும் வாய்க்கவே இல்லை.
ஏன் ?


உன் கவிதைகள் தேடும் அந்த மலர், உன் கண்களுக்குள் புக, உன் கற்பணைகள் கதவு பூட்டுகின்றனவோ!!!??? தோழனே! காதலின் இன்பங்ளை விடுத்து, காதலை தேடு!!!
ReplyDelete